உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை தலைவலி

தினமணி

ஒரு தலைப்பூண்டும், முருங்கை இலையும், சம அளவில் எடுத்து நசுக்கிச் சாறு எடுத்து, 2 அல்லது 3 துளிகளை இடது பக்க தலைவலிக்கு வலது பக்க மூக்கிலும், வலது பக்க தலைவலிக்கு இடது பக்க மூக்கிலும் உறிஞ்சிக்கொண்டால் தலைவலி உடனே நிற்கும்.

முருங்கை வேரின் பட்டை, வெள்ளைப்பூண்டு இரண்டையும், சம எடை எடுத்துப் பிழிந்து சாறு எடுத்து 2 அல்லது 3 துளிகளை மூக்கில் உறிஞ்சினால் தலைவலி தீரும்.

பூண்டு, வசம்பு, குப்பைமேனி வேர் இவற்றை சம அளவு எடுத்து அரைத்துச் சாறு எடுத்து 2 அல்லது 3 துளிகளை உறிஞ்சினால் தலைவலி தீரும்.

குப்பைமேனிச் சாறு, நல்லெண்ணெய் இரண்டையும் தலா கால் லிட்டர் எடுத்துக் காய்ச்சி தைலமாக்கி தலையில் தேய்த்துக் குளித்தால் தலைவலி தீரும்.

நொச்சிச் சாறு எடுத்துத் தலை மற்றும் கழுத்தில் தேய்த்தால், கழுத்து வலி, தலைவலி தீரும். தலை பாரமும் குறையும்.

நொச்சி இலை (ஒரு கைப்பிடி), துளசி (ஒரு கைப்பிடி) இரண்டையும் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து நீராவி பிடித்தால் தலை வலி, உடல் வலி, ஜலதோஷம் போன்றவை குணமாகும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT