உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- ஆதொண்டை இலையைச் சாறு (200 மில்லி) எடுத்து அதனுடன் திப்பிலியை(100கிராம்) ஊறவைத்து, பிறகு காயவைத்துப் பொடிசெய்து தினமும் இரண்டு கிராம் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நன்றாகப் பசி எடுக்கும்.
- ஆதொண்டை இலையோடு சீரகம் சேர்த்து கஷாயம் காய்ச்சி 60 மில்லி அளவுக்குக் குடித்து வந்தால் இரைப்பை நோய்கள், மந்தம், சூடு, வாந்தி, நெஞ்சு வலி போன்றவை குணமாகும்.
- ஆதொண்டை வேரை இடித்து நல்லெண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெய்யைத் தலையில் தேய்த்துக் குளித்துவந்தால் மூக்கடைப்பு, தொண்டைக்கட்டு, வாதக் குடைச்சல், மண்டைக் காய்ச்சல் போன்றவை குணமாகும்.
- ஆதொண்டை இலையை மோர் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து , தினமும் 50 மில்லி அளவுக்கு குடித்துவந்தால் நீர்க்கட்டு உடைந்து சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
- ஆதொண்டை இலையை (ஒரு கைப்பிடி), ஒரு லிட்டர் நல்லெண்ணெய்யில் போட்டுக் கொதிக்கவைத்து தைலம் பதத்தில் இறக்கவும். பின்பு இந்தத் தைலத்தைத் தலையில் தேய்த்துக் குளித்துவந்தால் கண்களில் உண்டாகும் பித்த மறைப்பு, பித்த நீரால் ஏற்படும் கண்நோய்கள் போன்றவை குணமாகும்.
குறிப்பு :
ஆதொண்டை கீரை, கொடி வகையை சேர்ந்தது. தடிப்பான இலைகளை கொண்டது. துளிர்விடும் பொழுது மஞ்சள் நிறமாகவும் முற்றிய இலைகள் பச்சை நிறத்திலும் இருக்கும். இக்கீரைக் கொடி வேலிகளில் படர்ந்து வளரும் தன்மையுடயது. இதன் காய்கள் இதன் இலை வடிவிலேயே இருக்கும். இக்கீரையை வீட்டிலும் வளர்க்கலாம்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com