உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை சீந்தில் கொடி!

தினமணி

சீந்தில் கொடி, வில்வம் இலை இவை இரண்டையும் சம அளவு சேர்த்து அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் குடல் புண் குணமாகும்.

சீந்தில் கொடி, பொன்னாங்கண்ணிக் கீரை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.

சீந்தில் கொடியை நன்றாக அரைத்து வழுக்கைத் தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் முடி முளைக்கும்.

சீந்தில் கொடி, சீரகம் இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச்  சாப்பிட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.

சீந்தில் கொடியைப் பொடி செய்து , காலை மாலை என இருவேளையும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

சீந்தில் சர்க்கரை:

முதிர்ந்த, முற்றிய கொடியை, மேல் தோலை உரித்து, நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி, நன்றாக இடித்து, தேவையான அளவு தூய்மையான நீரில் கரைத்து, 4 மணி நேரம் வைத்திருந்து நீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டியது போக சிறிதளவு மாவு போன்ற பொருள் பாத்திரத்தின் அடியில் படிந்திருக்கும்.

மீண்டும் மீண்டும் நீர்விட்டு இதனைத் தெளியவைத்து, வடிகட்டி எடுத்து நிழலில் உலர்த்தினால் வெண்மையான தூள் கிடைக்கும். இதுவே எளிய முறையில் தயாரிக்கப்பட்ட சீந்தில் சர்க்கரை ஆகும்.

இதனை, ஒரு கிராம் அளவில் உள்ளுக்குச் சாப்பிட, வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப்போக்கை நீக்கும். கல்லீரல், மண்ணீரல் ஆகியவை சீந்தில் சர்க்கரை சாப்பிட உறுதியாகும். உடல் எடை, உறுதி அதிகமாகும். பிற மருந்துகளுடன் சீந்தில் சர்க்கரை சிறிதளவு சேர்த்துக் கொடுக்க பலவகையான நோய்களும் விரைவில் குணமாகும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா 
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்/ Foot 
and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT