உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை உளுந்து

DIN

உளுந்து, சிறுபருப்பு, பச்சரிசி இவை மூன்றையும் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தால், பாலூட்டும் பெண்களுக்கு தாராளமாகப் பால் சுரக்கம்.

உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் இவை மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்துகொள்ளவும். இதில் தேவையான அளவு எடுத்து வெந்நீரில் கலந்து பற்றுப்போட்டால், மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ளிட்ட வாத நோய்கள் குணமாகும்.

உளுந்தை தண்ணீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரைக் குடித்து வந்தால் சிறுநீரக நோய்கள் அனைத்தும் குணமாகும்.

உளுந்து, பார்லி இவைகளை தலா 100 கிராம், மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் இவற்றை தலா 10 கிராம் எடுத்து அரைத்து , கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தால் வெட்டைச் சூடு , வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.

உளுந்தை மாவாக்கி , அதனுடன் மிளகு, சீரகம், கொத்தமல்லி, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தால் குடல் புண்கள் ஆறும்.

உளுந்து, சின்ன வெங்காயம் இவை இரண்டையும் சேர்த்துக் கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT