உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- சிறுநீர் எரிச்சல் தீர சந்தனம் தூள் (1 டீஸ்பூன்) எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் காய்ச்சி வடிகட்டி குடிநீர் செய்து குடித்து வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும்.
- முகப்பரு , படர் தாமரை குணமாக சந்தனம் கட்டையை, எலுமிச்சம் பழச்சாறு விட்டு நன்றாக உரைத்து பசையாக செய்து படர் தாமரை, வெண்குஷ்டம், முகப் பரு உள்ள இடங்களில் பூசி வந்தால் இவை அனைத்தும் குணமாகும்.
- இரத்த மூலம் குணமாக சந்தனம் தூள் (2 டீஸ்பூன்), அரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி குடிநீராக செய்து குடித்து வந்தால் இரத்த மூலம் குணமாகும்.
- சர்க்கரை குணமாக நெல்லிக்காய்ச்சாறு (15 மில்லி) சந்தனம் சுண்டைக்காய் அளவு எடுத்து விழுதாக அரைத்து நெல்லிக்காய் சாறுடன் கலந்து 48 நாளகள் குடித்து வந்தால் நீரிழிவு நோய் குணமாகும்.
- உடல் சூடு , அழற்சி குணமாக பசும்பாலில் சந்தனக்கட்டையை உரைத்து புளியங்கொட்டை அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வெட்டை சூடு, உடல் சூடு , சிறுநீர் பாதையில் உண்டாகும் வலி , அழற்சி போன்றவை குணமாகும்.
- கண்கட்டி குணமாக சந்தனக்கட்டையை எலுமிச்சம்பழச்சாற்றில் நன்கு அரைத்து பசை போல் செய்து, கண் கட்டிகள் மீது பற்று போட வேண்டும். இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன்னர் இவ்வாறு செய்து வந்து காலையில் கழுவிவிட வேண்டும்.
- 5 நாட்கள் தொடர்ச்சியாக இப்படி செய்து வந்தால் கண் கட்டி முற்றிலும் குணமாகும்.
- காய்ச்சல் , நீர்க்கோவை நீங்க சந்தனத்தூள் (20 கிராம்) எடுத்து அதை (300 மி.லி) தண்ணீரில் போட்டு காய்ச்சி (150 மி.லி) வடிகட்டி காலை மதியம் இரவு என மூன்று வேளையும் (50 மில்லி ) வீதம் குடித்து வந்தால் நீர்க்கோவை, காய்ச்சல், மார்புத் துடிப்பு ,மந்தம், இதய வலி ஆகியவை தீரும்.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com