உணவே மருந்து

குளிர்ச்சியால் உண்டாகும் சளி மற்றும் வாய், தொண்டையில் உண்டாகும் வீக்கம் குணமாக

தண்ணீரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்பொழுது பனிக்கட்டியாகிறது.

கோவை பாலா

 
அறிகுறிகள் : தண்ணீரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் பொழுது பனிக் கட்டியாகிறது. அதன் நிறம் வெண்மை. அதுபோல் நம் உடலில் உள்ள நீர்நிலைகள் (MUCUS) அதிக குளிர்ச்சியால் கெட்டியாகிவிடும். இதனால் சளி வெண்மை நிறமாக வரும். மேலும் நரம்பு மண்டல பாதிப்பினால் வாய் மற்றும் தொண்டையில் உண்டாகும் வீக்கம்.

மண்டலம் - நரம்பு மண்டலம்
காய் - கொத்தவரங்காய்
பஞ்சபூதம் - காற்று 
மாதம் - ஆனி
குணம் - எளிமை
ராசி/லக்கினம்  -  மிதுனம் 

சத்துக்கள் : இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது.

தீர்வு :  கொத்தவரங்காயுடன்(5) , புடலங்காய் (100 கிராம், தோல், விதையுடன்), கோவக்காய் (5) மூன்றையும் நன்றாக கழுவி நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் புதினா (சிறிதளவு), தக்காளி (1) சேர்த்து  தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி காலை மற்றும் மாலையில் குடித்து வரவும். பின்பு வழக்கமாக உண்ணக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT