உணவே மருந்து

ருசி மிகுந்த நிலக்கடலை சட்னி ரெசிபி இதோ!

தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் நிலக் கடலைபருப்பு,

எஸ். சரோஜா

தேவையான பெருள்கள்

நிலக்கடலை பருப்பு ( வறுத்தது) - 150 கிராம்
தேங்காய்த்துருவல் - கால் கிண்ணம்
தக்காளி - 3
வெங்காயம் - 2
மிளகாய் வற்றல் - 3
வெள்ளைப் பூண்டு - 8 பற்கள்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிது
உளுந்தம் பருப்பு, கடுகு - 1 தேக்கரண்டி

செய்முறை

தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் நிலக் கடலைபருப்பு, தேங்காய்த்துருவல், மிளகாய் வற்றல், வெள்ளைப் பூண்டு சேர்த்து மிக்ஸியிலிட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து, பின்னர் அரைத்த விழுதையிட்டு, உப்பும் சேர்த்து நன்கு கலந்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். நன்கு கொதித்து கமகம வாசனை வந்ததும் இறக்கவும். நிலக்கடலை சட்னி தயார். இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம் இவைகளுடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். நிலக்கடலையில் புரதம், தாதுப் பொருள்கள் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT