- இரைப்பு இருமல் குணமாக ஆடாதொடா வேர் , கண்டங்கத்தரி வேர் , சுக்கு, கொள்ளு ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை (2கிராம்) அளவு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரைப்பு இருமல் குணமாகும்.
- ஆடாதொடா இலையில் வாசிசின் என்னும் வேதிப்பொருள் நுரையீரல் செல்களில் புகுந்து வேலை செய்து விரிவடைய செய்வதால் ஆஸ்துமா, நாட்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை இது குணப்படுத்துகிறது.
- இருமல் மற்றும் சளியுடன் ரத்தம் வெளியேறுவது நிற்க ஆடாதொடா இலையை அரைத்துச் சாறு (5 மி.லி) அளவு எடுத்து , அதில் தேன் கலந்து காலை வேளையில் குடித்து வந்தால் இருமல் மற்றும் சளியுடன் ரத்தம் வெளியேறுவது நிற்கும்.
- காசநோய் குணமாக ஆடாதொடா இலையைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து , பாதியாகச் சுண்டிய பிறகு தினமும் 50 மில்லி அளவு குடித்து வந்தால் காசநோய் குணமாகும்.
- தசைப்பிடிப்பினால் உண்டாகும் வலி நீங்க உடலில் தசைப்பகுதிகளில் உண்டாகும் வலி போன்றவற்றிற்கு ஆடாதொடா இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து குடித்து வந்தால் தசைபிடிப்பினால் உண்டாகும் வலி குணமாகும்.
- அனைத்துவிதமான உடல் வலி நீங்க ஆடாதொடா வேரை கஷாயம் வைத்துக் (50 மி.லி) அளவு காலை வேளையில் குடித்து வந்தால் அனைத்துவிதமான உடல் வலிகளும் குணமாகும்.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com