உணவே மருந்து

சகல நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும் சூப்

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

கோவை பாலா

 

வெங்காயத்தாள் சூப்

தேவையான பொருட்கள்

வெங்காயத் தாள் -  ஒரு கட்டு
இஞ்சி  -   ஒரு துண்டு
தக்காளி  -    4
தேங்காய்  -   ஒரு மூடி
மிளகு  -  5 கிராம்
கொத்தமல்லித் தழை -  2 கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு

செய்முறை : முதலில் வெங்காயத்தாள் மற்றும் கொத்தமல்லித் தழைகளை நன்றாக கழுவி பொடிப் பொடியாக அரிந்து கொள்ளவும். பின்பு தக்காளியை நறுக்கி இஞ்சி மற்றும் மிளகு சேர்த்து அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி பால் எடுத்து  தக்காளிச் சாறுடன் கலந்து கொதிக்க வைக்கவும். பின்பு கொதிக்க வைத்த சாறுடன் நெய் மற்றும் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தாளையும் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் உப்பு சேர்த்து இறக்கவும்.

பலன்கள் : இந்த வெங்காயத்தாள் சூப்பை எந்த நோயினாலும் பாதிக்கப்பட்டவர்களும் அருந்தலாம், அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும்.

இரவு படுக்கப் போகும் முன் : வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் - வெள்ளி விலை!

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

காஞ்சிபுரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 10,719 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT