உணவே மருந்து

நாள்பட்ட நீர் எரிச்சல் , நீர் கடுப்பால் அவதிப்படுகிறீர்களா?

தினமணி

நாள்பட்ட நீர் எரிச்சல், நீர்கடுப்பால் அவதிப்படுகின்றவர்கள் பசலைக் கீரை சீரகம் கசாயத்தைச் செய்து சாப்பிட்டு வர விரைவில் அந்த பிரச்னையில் இருந்து விடுபடலாம். 

தேவையான பொருட்கள்

பசலைக் கீரை.            -   2  கட்டு

பார்லி.                           -   3 ஸ்பூன்

சீரகம்.                           -    3  ஸ்பூன்

செய்முறை

முதலில் பசலைக் கீரையை  நன்கு கழுவி ஆய்ந்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அரைத்த சாற்றில் பார்லி  மற்றும்  சீரகத்தை 12 மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறினப் பிறகு அதனை காயவைத்து அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 250 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் அரைத்து வைத்துள்ள பொடியில் மூன்று ஸ்பூன் அளவு போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து அதனை பாதியாகச் சுண்டவைத்து இறக்கி வைத்துக் கொண்டு குடிக்கவும்.

பயன்கள்

நீர்கடுப்பு மற்றும் நீர் எரிச்சல் தொடர்ந்து உள்ளவர்களுக்கு மிகச் சிறத்த தீர்வை தரக்கூடிய கசாயம் பசலைக் கீரை சீரகம் கசாயம்.

இதனை காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடனடித் தீர்வு கிடைக்கும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா 

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609  ,  73737 10080

Covaibala15@gmail.com  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

SCROLL FOR NEXT