முகப்பு
இந்தியா

சீன ஊடுருவல் விவகாரம்: அமைச்சரவைக்கு ராணுவ தலைமை தளபதி விளக்கம்

சீன ஊடுருவல் விவகாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைக்கு இந்திய ராணுவ தலைமை தளபதி விக்ரம் சிங் புதன்கிழமை விளக்கினார்.

Updated On : 1 மே 2013, 11:03 pm IST
பகிர்:

சீன ஊடுருவல் விவகாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைக்கு இந்திய ராணுவ தலைமை தளபதி விக்ரம் சிங் புதன்கிழமை விளக்கினார்.

சீன ஊடுருவல் விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார் விக்ரம் சிங். இந்நிலையில் இந்த விவகாரத்தில் ராணுவத் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் அமைச்சரவையுடன் கலந்தாலோசித்தார்.

எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ள இந்தியப் படைகளை திரும்பப் பெறுமாறு சீனா வலியுறுத்தி வருகிறது. இரு நாடுகளும் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளன.

Advertisement

Advertisement

சீனா தனது படைகளை திரும்பப் பெறுவதை உறுதி செய்யாமல் இந்தியாவும் தனது எல்லை பாதுகாப்பு கட்டமைப்பை மாற்ற தயாராக இல்லை.

பிரிகேடியர் நிலையில் உள்ள இரு நாட்டுப் படைப்பிரிவுத் தலைவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.