புணே குண்டு வெடிப்பு வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்
புணே குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாத தடுப்புப் படையினர் புதன்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
புணே குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாத தடுப்புப் படையினர் புதன்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி புணேயில் 4 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழந்தது.
இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 8 பேர் மற்றும் தலைமறைவாக உள்ள 5 பேர் மீது மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு படை புணேயில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் 3857 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது.
Advertisement
Advertisement
இந்திய முஜாஹுதின் அமைப்பினர், லஷ்கர் இ தொய்பா உதவியுடன் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினர் என குற்றம் சாட்டியுள்ளனர். 300 சாட்சிகளின் வாக்குமூலங்கள் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன.