பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் கைது
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:10 PM
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்திய ராணுவம் தொடர்பான பல்வேறு ரகசிய தகவல்களை சேகரித்து கடந்த 3 அல்லது 4 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பார்மர் மாவட்டம் மதாரி கிராமத்தைச் சேர்ந்த ரோஷன் கான் (45) என்பவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேல் விசாரணைக்காக ரோஷன் கான் ஜெய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார்.