சித்திரையில் படி பஜனை!
தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க மாதமான சித்திரை திருவிழாவிற்குப் பெயர் பெற்ற மாதம்.
தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க மாதமான சித்திரை திருவிழாவிற்குப் பெயர் பெற்ற மாதம்.
சென்னையை அடுத்துள்ள குரோம்பேட்டையில் உள்ள அழகான சிறு குன்றில் அமைந்துள்ளது குமரன் குன்றம் மலைக்கோயில். காஞ்சி மகா சுவாமிகள் அருளாசியுடன் கட்டப்பட்ட கோயில் இது. மலையின் அடிவாரத்தில் விநாயகரும், நடுவில் மீனாட்சி சுந்தரேஸ்வரரும், சிவகாமி சமேத நடராசரும் (கால் மாறி ஆடுபவர்), சரபேஸ்வரரும், மலை உச்சியில் சுவாமி நாத சுவாமியும் குடிகொண்டுள்ளார்கள்.
இக்கோயிலில் "குமரன் குன்றம் திருப்புகழ் மன்றம்' சார்பில் கடந்த பல ஆண்டுகளாக தமிழ்ப்புத்தாண்டு அன்று திருப்புகழ் படி பஜனை நடக்கிறது. அவ்வகையில் வரும் தமிழ்ப்புத்தாண்டு அன்று 35வது படி பஜனை நடைபெற உள்ளது.
மேலும் புதிதாக ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டு இக்கோயிலுக்கு விரைவில் குடமுழுக்கு நடைபெற உள்ளது.
தகவலுக்கு: 94441 78434.