இந்தியா

சென்னைக்குப் பதில் மைசூர் சோதனை மையத்தில் மேகி சோதனை

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸை மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் சோதனை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

IANS

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸை மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் சோதனை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

லக்னோவில் உள்ள மெகி குடோன்களிலிருந்து மாதிரிகளை எடுத்து சென்று சோதனை நடத்துமாறு மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய ஆணையருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்லா சி பாண்ட் ஆகியோர் இன்று உத்தரவிட்டனர்.

முன்னதாக கடந்த 9 ஆம் தேதி தேசிய நுகர்வோர் குறைதீர் மன்றம் வெளிட்ட உத்தரவில், மேகி நூடுல்ஸை சென்னையில் உள்ள சோதனை மையத்தில் ஆய்வு செய்ய வலியுறுத்தியிருந்தது.

இதை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மேகி நூடுல்ஸை மைசூரில் உள்ல மத்திய அரசு சோதனை மையத்தில் ஆய்வு செய்ய உத்தரவிட்டனர்.

மேலும், தரம்குறைந்த மேகி நூடுல்ஸை விற்பனை செய்தது தொடர்பாக ரூ. 640 கோடி கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வழக்கை, தேசிய நுகர்வோர் குறைதீர் மன்றம்  தொடர்ந்து நடத்துவதற்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT