பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இன்று ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக, கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளியில் தங்கினர்.
பஞ்சாப் மற்றும் அரியானாவில் நேரிட்ட நிலநடுக்கத்தால் காயமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் சனிக்கிழமை நள்ளிரவு 12.44 மணியளவில் தில்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் உணரப்பட்டது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள் நில அதிர்வை உணர்ந்ததும் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்த பொதுமக்கள், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் வெட்டவெளியில் அமர்ந்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.