இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகள் இணைந்து ஒரு கூட்டமைப்பாக உருவாகுவதற்கு வாய்ப்புள்ளது. இதன் மூலம் இப்பிராந்தியத்தில் நிலவும் தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என லோக் ஜன சக்தி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் கூறினார்.
ஒரு காலத்தில் ஒரே நாடாக இருந்த இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்தால் நல்லதுதான். குறைந்தபட்சம் இந்த மூன்று நாடுகளும் இணைந்து ஒரே கூட்டமைப்பு உருவாகலாம்.
இதன் மூலம் இப்பிராந்தியத்தில் நிலவும் தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றார்.
முன்னதாக நேற்று பேட்டியளித்த பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகள் இணைந்து ஒரே நாடாக உருவாகும் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து இன்று விளக்கம் அளித்த பாஜக செய்தி தொடர்பாளர் எம்.ஜே.அக்பர், ராம் மாதவ் கூறியது அவரது சொந்த கருத்து என்றார்.
கடந்த 1999 ஆம் ஆண்டு லாகூர் பயணம் மேற்கொண்ட அப்போதைய பிரதமர் வாஜ்பாய் இந்தியாவும், பாகிஸ்தானும் இரு இறையாண்மை நாடுகள் என்று கூறியதை நினைவுகூர்ந்த அக்பர், அது உண்மையே என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.