தில்லி மெட்ரோ ரயில் பயணிகளின் கூட்டம் அதிகரிக்கவிருக்கும் நிலையில், மகளிர் பெட்டியை இடமாற்றம் செய்யுமாறு மத்திய இணை அமைச்சர் மேனகா காந்தி யோசனை வழங்கியுள்ளார்.
மெட்ரோ ரயிலில் தற்போதிருக்கும் கடைசிப் பெட்டியில் இருந்து மாற்றி, ரயிலின் நடுப் பெட்டிகளில் மகளிருக்கான பெட்டியை ஒதுக்கித் தர வேண்டும் என்று மேனகா யோசனை அளித்துள்ளார்.
மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் மேனகா காந்தி இது குறித்து தில்லி மெட்ரோ ரயில் கழகத்துக்கும் கடிதம் எழுதவிருப்பதாகக் கூறியுள்ளார்.
தற்போதிருக்கும் விதிப்படி, மெட்ரோ ரயிலில் ஒரு பெட்டியை மகளிருக்காக ஒதுக்க வேண்டும். ஒன்று அதனை முதல் பெட்டியாகவோ அல்லது கடைசிப் பெட்டியாகவோ இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.