மதன் மித்ராவுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து சிபிஐ மனு
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மேற்கு வங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ராவுக்கு ஜாமீன்
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மேற்கு வங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து கோல்கத்தா உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.
பல கோடி ரூபாய் மோசடி நடந்த சாரதா நிதி நிறுவன வழக்கில் மித்ரா மீது மோசடி செய்தது உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில் கடந்த 11 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதன் மித்ராவுக்கு சனிக்கிழமை ஜாமீன் வழங்கப்பட்டது.
Advertisement
இதையடுத்து அவர் எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியே வந்து, வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.