இந்தியா

எலக்ட்ரீஷியன், பிளம்பர் ஆகும் கான்பூர் சிறைக் கைதிகள்

கான்பூரில் உள்ள மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பிங் தொழிற் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. அதே போல, பெண் கைதிகளுக்கு அழகுக் கலை, மருதாணி வைப்பது போன்ற கைத்தொழில்கள் பயிற்றுவிக்கப்பட உள்ளது.

PTI

கான்பூரில் உள்ள மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பிங் தொழிற் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. அதே போல, பெண் கைதிகளுக்கு அழகுக் கலை, மருதாணி வைப்பது போன்ற கைத்தொழில்கள் பயிற்றுவிக்கப்பட உள்ளது.

சிறைத் துறை கண்காணிப்பாளர் விஜய் விக்ரம் சிங் இது குறித்து கூறுகையில், 160 சிறைக் கைதிகள் பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயிற்சி முடிந்து சிறையில் இருந்து வெளியேறும் போது, இந்த கைத்தொழில்களைக் கொண்டு இவர்கள் வாழ்வார்கள். மீண்டும் அதே குற்றத்தொழில்களில் ஈடுபட மாட்டார்கள் என்பதால் இந்த பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.

இந்த பயிற்சிகள் அனைத்தும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பணியாற்றும் பயிற்றுநர்களைக் கொண்டு வழங்கப்படுவதாகவும், விரைவில், இங்கு மோட்டார் மெக்கானிக், மொபைல் ரிப்பேர், இன்வெர்டர் ரிப்பேர், மோட்டார் வைன்டிங் போன்ற பயிற்சிகளும் துவங்க உள்ளன என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT