இந்தியா

மும்பை குடியிருப்பில் கப்பற்படை அதிகாரியின் மனைவி படுகொலை

மும்பையின் புறநகரான தாதர் பகுதியின் குடியிருப்பு ஒன்றில், இந்திய கப்பற்படை அதிகாரியின் மனைவி தலையில் பயங்கர காயத்துடன் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PTI

மும்பையின் புறநகரான தாதர் பகுதியின் குடியிருப்பு ஒன்றில், இந்திய கப்பற்படை அதிகாரியின் மனைவி தலையில் பயங்கர காயத்துடன் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவாஜி பூங்கா அருகே லுயிஸ் கோர்ட் குடியிருப்பில் வசித்து வந்த 57 வயதாகும் பெலஸா கார்டோஸோ ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்த அவரது வீட்டு வேலைக்காரப் பெண், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியோடு, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உயிரிழந்த பெலஸாவின் கணவர் தற்போது நடுக்கடலில் கப்பலில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெலஸாவின் வீட்டில் தச்சு வேலை செய்ய வந்த நபர்தான் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தலைமறைவாக இருக்கும் அந்த நபரை தேடி வருகிறார். கொலைக்கான பின்னணி தெரியவரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT