முகப்பு
இந்தியா

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்: பதக்கங்களை திருப்பி வழங்க முன்னாள் ராணுவத்தினர் முடிவு

ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் முன்னாள் ராணுவத்தினர் தங்களது பதக்கங்களை திருப்பி அளிப்பது என முடிவு செய்துள்ளனர்.

Updated On : 6 நவம்பர், 2015 at 7:31 PM
பகிர்:

ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் முன்னாள் ராணுவத்தினர் தங்களது பதக்கங்களை திருப்பி அளிப்பது என முடிவு செய்துள்ளனர்.

போராட்டம் நடத்தி வரும் அனைவரும் ஒன்றிணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்திய முன்னாள் ராணுவத்தினர் அமைப்பின் தலைவர் கேப்டன் வி.கே. காந்தி கூறினார்.

புதுதில்லியின் ஜந்தர்மந்தரில் கடந்த 145 நாள்களாக போராட்டம் நடத்தி வரும் முன்னாள் ராணுவத்தினர் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்துவது என முடிவு செய்துள்ளனர்.

Advertisement

இதன்படி, நவம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் அனைத்து முன்னாள் ராணுவத்தினரும் தங்களது பதக்கங்களை இந்தியா முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களிடம் திருப்பி அளிப்பார்கள். அதை பெறும் மாவட்ட ஆட்சியர்கள் அதை பிரதமருக்கோ அல்லது குடியரசு தலைவருக்கோ அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம் என்றார்.

மாவட்ட ஆட்சியர்கள் பதக்கங்களை பெறாதபட்சத்தில அவற்றை அவர்களது அலுவலகத்திலேயே வைத்துவிட்டு வருவோம் என்றார் காந்தி

அரசு அறிவித்துள்ள ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம் முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளது என்று கூறிய காந்தி, அது ஒரே பதவி ஐந்து ஓய்வூதியம் என்பதாய் உள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.