ஹைதரபாத்: லிப்டில் சிக்கி முதல் வகுப்பு மாணவி பரிதாப பலி
ஹைதரபாத் நகரில் இன்று காலை நிகழ்ந்த சோக சம்பவத்தில் ஐந்து வயது மாணவி ஒருவர் லிப்டின் கதவுகளுக்கு இடையே சிக்கி பரிதாபமாக இறந்தார்.
ஹைதரபாத் நகரில் இன்று காலை நிகழ்ந்த சோக சம்பவத்தில் ஐந்து வயது மாணவி ஒருவர் லிப்டின் கதவுகளுக்கு இடையே சிக்கி பரிதாபமாக இறந்தார்.
மலாக்பேட் பகுதியின் முஸ்ராம்பக் என்ற இடத்தில் உள்ள ஸ்டார் கிட்ஸ் பள்ளியில், இன்று காலை முதலாம் வகுப்பு மாணவி ரஹீனா ஃபாத்திமா (5), மூன்றாம் மாடியில் உள்ள தனது வகுப்பு செல்ல முயன்றார். அப்போது எதிர்பாரதவிதமாக லிப்டின் இரு கதவுகளுக்கு இடையே சிக்கி பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதையடுத்து பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தையின் பெற்றோரும் உறவினர்களும் பள்ளியில் குவிந்தனர். கவனக்குறைவாக இருந்த பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர்.
Advertisement
காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, போராட்டகாரர்களை சமாதானப்படுத்தினர். மேலும், சம்பவம் குறித்து பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினருடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.