முகப்பு
இந்தியா

பிரதமர் மோடி வார இறுதியில் மலேசியா, சிங்கப்பூர் பயணம்

ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய கூட்டமைப்பு கூட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, வார இறுதியில் மலேசியா பயணம் மேற்கொள்கிறார்.

Updated On : 18 நவம்பர், 2015 at 8:31 PM
பகிர்:

ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய கூட்டமைப்பு கூட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, வார இறுதியில் மலேசியா பயணம் மேற்கொள்கிறார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலர் அனீல் வத்வா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மலேசிய தலைநகர் கோலாலாம்பூரில் வருகிற 21 ஆம் தேதி ஆசியான் கூட்டமைப்பு நாடுகளின் கூட்டமும், கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமும் பிரதமர் அப்துல் ரசாக் தலைமையில் நடைபெறுகிறது.

Advertisement

இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரமதர் நரேந்திர மோடி, நவம்பர் 21 ஆம் தேதி கோலாலம்பூர்  சென்றடைகிறார்.

இக்கூட்டங்களுக்கு பின், பிரதமர், மலேசியா நாட்டுடான இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதைத்தொடர்ந்து நவம்பர் 23 ஆம் தேதி சிங்கப்பூர் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லீ செய்ன் லூங்ஙை, பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கிறார். பின்னர் நவம்பர் 24 ஆம் தேதி இரவு புதுதில்லி திரும்புகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.