சித்தூர் மேயர் கொலை: முக்கிய குற்றவாளி சரண்
ித்தூர் மேயர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சித்தூர் மேயர் அனுராதாவும் அவரது கணவர் மோகனும் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி சந்திரசேகர் என்ற சின்ட்டு இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
ஆந்திரத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சித்தூர் மேயர் அணுராதாவும் அவரது கணவர் மோகனும், அவர்களது அலுவலகத்திலேயே பட்டப் பகலில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இக்கொலை தொடர்பாக 10 பேர் போலீஸில் சரணடைந்துள்ளனர்.
சொந்த குடும்பப் பகை காரணமாகவே இக்கொலை நிகழ்ந்துள்ளது. இக்கொலைக்காக கடந்த 6 மாதங்களாக கொலையாளிகள் திட்டமிட்டுள்ளனர் என போலீஸார் கூறினர்.
Advertisement
இந்நிலையில் இக்கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான சந்திரசேகர் சித்தூரில் உள்ள நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்
சந்திரசேகரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக, நீதிமன்றத்தில் விரைவில் மனுதாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.