முகப்பு
இந்தியா

மோடியின் பிரபலத்தால் பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்: அருண் ஜேட்லி

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் பிரபலத்தால், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே அடுத்து ஆட்சியை அமைக்கும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

Updated On : 29 அக்டோபர், 2015 at 1:28 PM
பகிர்:

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் பிரபலத்தால், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே அடுத்து ஆட்சியை அமைக்கும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

மோடியின் புகழும், அவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், அவரது பிரசாரக் கூட்டங்களில் கூடும் மக்கள் கூட்டத்தில் இருந்தே காண முடிகிறது. பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு மோடி முக்கியக் காரணமாக இருப்பார் என்றும் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அல்லது மத்தியில் ஆளும் கட்சிக்கு வாக்களித்து, அந்த கட்சியே மாநிலத்தை ஆண்டால், மத்திய அரசுடன், மாநில அரசுக்கு ஒரு நல்ல நட்புறவு ஏற்படும், அதனால், மாநிலம் வளர்ச்சி பெறும் என்று மக்கள் விரும்புவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு மற்றொரு காரணமாக அமையும் என்று அவர் கூறினார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.