இந்தியா

கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு

கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

PTI

கொல்கத்தா: கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

பாலத்தின் கீழே சிறிய கோயில் இருந்த இடத்தில் மீட்புப் பணி நடந்த போது, இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த இரண்டு ஆண்களின் உடல்கள் இன்று மீட்கப்பட்டதை அடுத்து பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது.

கொல்கத்தா நகரின் வர்த்தகப் பகுதியான படாபஜார் அருகே விவேகானந்தா சாலையில் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி கடந்த வியாழக்கிழமை பிற்பகலில் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் சிக்கிய 24 பேர் உடல்கள் நேற்று மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டன.

89 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக பாலம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம்! இபிஎஸ் விளக்கம்

பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா வெளியீட்டுத் தேதி!

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

SCROLL FOR NEXT