இந்தியா

கூடங்குளம் அணு உலையில் நீராவி கசிவு: மின் உற்பத்தி நிறுத்தம்

நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதல் அணு உலையில் நீராவி கசிவு காரணமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

IANS

நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணு  மின் நிலையத்தில் முதல் அணு உலையில் நீராவி கசிவு காரணமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பராமரிப்புப் பணிக்காக கடந்த 7 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் உலை கடந்த ஜனவரி 30ம் தேதிதான் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு 8.35 மணியளவில், அணு உலையில் நீராவி கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

முதல் அணு உலையில் இதுவரை 582 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்றுதான் முதல் முறையாக 757 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

எனினும், அணு உலைக்கு நீர் செல்லும் டர்பைன் பகுதியில் லேசான நீராவி கசிவு ஏற்பட்டதை அடுத்து மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, பாதிப்பு சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது என்று கூடங்குளம் அணு நிலைய இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் கூறியுள்ளார்.

கோளாறு சரி செய்யப்பட்டு பிப்ரவரி 7ம் தேதி மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT