ஹைதராபாத்தில் இன்று காலை மருந்து உற்பத்தி தொழிற்சாலையில் நேரிட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர்.
மகேஷ்வரம் என்ற பகுதியில் இயங்கி வந்த அஸிதா பார்மா மற்றும் மருந்து தொழிற்சாலையில், உலை வெடித்துச் சிதறியதில் 2 பேர் காயமடைந்தனர்.
இந்த வெடி விபத்தால், தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. உலைக்கு மிக அருகே பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்தில் பலியான 4 இளைஞர்களும் சட்டீஸ்கரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.