மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஐஸ்ஐஎஸ் அனுதாபி கைது
தேசிய புலனாய்வு துறையினர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் அனுதாபியை நேற்று கைது செய்தனர்.
தேசிய புலனாய்வு துறையினர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் அனுதாபியை நேற்று கைது செய்தனர்.
இராக், சிரியா, லிபியா நாடுகளை உள்ளடக்கிய பகுதிகளில் இஸ்லாமிய தேசத்தை உருவாக்கும் வகையில் பயங்கரவாத அமைப்பு (ஐஎஸ்ஐஎஸ்) செயல்பட்டு வருகிறது.
இந்த நாடுகளில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் சார்பில் போரிடுவதற்காக பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களை மூளைச் சலவை செய்யப்படுகின்றனர்.
Advertisement
இந்தியாவிலும் சில இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளனர். சிலர் சேருவதற்காக பயிற்சி எடுத்து வருகின்றனர்.
இந்திய இளைஞர்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ப்பவர்களை கண்டுபிடித்து, மத்திய புலனாய்வு துறையினர் கைது செய்து வருகின்றனர். அதன்படி, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட மேற்குவங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிக் அகம்மது என்ற ராஜவை தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று கைது செய்தனர். அவர் தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.