முகப்பு
இந்தியா

மும்பை தியோனர் குப்பை கிடங்கில் தொடரும் தீ: சுவாச பிரச்னையால் மக்கள் அவதி

மும்பையில் தியோனர் என்ற பகுதியில் குப்பை கிடங்கில் தொடர்ந்து தீ பற்றி எரிவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் பாதிக்குள்ளாகியுள்ளனர்.

Updated On : 22 மார்ச், 2016 at 12:24 PM
பகிர்:

மும்பையில் தியோனர் என்ற பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் தொடர்ந்து தீ பற்றி எரிவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் பாதிக்குள்ளாகி உள்ளனர்.

லேசான தீப்பிடித்த அப்பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாட்களாக இன்றும் தீ பரவி வருகின்றது. இதுவரை மூன்று கிலோ மீட்டர் வரை தீ பரவியுள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், அங்கு உள்ள குடியிருப்பு வாசிகள் மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறு பிரச்னையால் அவதிப்படுவதாக புகார் கூறியுள்ளனர்.

Advertisement

இதுகுறித்து, அமைச்சருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதனை ஆராயும் வகையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் சிறப்பு குழு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இந்தக் குழுவின் மூலம் தீயை விரைவில் கட்டுக்குள் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.