இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் புதிய அரசு: பிரதமர் மோடியுடன்-மெஹபூபா இன்று சந்திப்பு

மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவரும், முஃப்தி முகமது சயீதின் மகளுமான மெஹபூபா முஃப்தி இன்று தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.

ANI

மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவரும், முஃப்தி முகமது சயீதின் மகளுமான மெஹபூபா முஃப்தி இன்று தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பின் முக்கியதுவமாக பாஜகவும்-மக்கள் ஜனநாயகக் கட்சியும் இணைந்து மீண்டும் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்தும், மார்ச் 24-ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், கடந்த வியாழக்கிழமை மெஹபூபா முஃப்தி தில்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது ஜம்மு-காஷ்மீரில் புதிய அரசு அமைப்பது குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இன்று நடைபெறும் சந்திப்பு முக்கியத்துவம் பெரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT