பேஸ்புக்கின் நேரடி ஒளிபரப்பு என்ற சேவை மூலம், வாக்காளர்களிடம் நேரடியாக உரையாடினார் கேரள முதல்வர் உம்மன் சாண்டி.
பேஸ்புக் மூலம் வாக்காளர்களுடன் பேசும் வாய்ப்பினை பயன்படுத்தும் முதல் முதல்வர் உம்மன் சாண்டிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக்கின் நேரடி உரையாடல் மூலமாக நேற்று இரவு 9 மணிக்கு சுமார் 30 நிமிடங்கள் உம்மன் சாண்டி உரையாடினார். அப்போது, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பேஸ்புக்கில் கேள்விகளை எழுப்பினர். அதற்கு உம்மன் சாண்டி பதில் அளித்தார்.
வாக்காளர்களுடன் உரையாடவும், அவர்களுடன் விவாதிக்கவும், விவாதங்களை நடத்தவும், கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் இந்த பேஸ்புக் தொழில்நுட்பம் மிகுந்த பயனுள்ளதாக இருப்பதாக உம்மன் சாண்டி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.