இந்தியா முழுவதும் ஹோலிப் பண்டிகை இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் மூலம் அவர் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில்,
அனைவருக்கும் எனது ஹோலிப் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வண்ணமயமான பண்டிகை அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியை சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த வாரம் உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா நகரில் வசிப்பவர்கள் வண்ண பொடியை ஒருவருக்கொருவர் பூசிக்கொண்டும், ஸ்ரீ ஜி கோயிலில் 'லட்டூஸ் ஹோலி' பூவா, தலையா என்று போட்டி மூலம் லட்டுக்களை வீசியும் ஹோலியை கொண்டாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.