முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் மதிய உணவு சாப்பிட்டு 40 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

ராஜஸ்தான் பன்ஸ்வாரா மாவட்டத்தில் மதிய உணவு சாப்பிட்ட 40 மாணவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 7 மே, 2016 at 1:00 PM
பகிர்:

பன்ஸ்வாரா (ராஜஸ்தான்):

ராஜஸ்தான் பன்ஸ்வாரா மாவட்டத்தில் மதிய உணவு சாப்பிட்ட 40 மாணவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களின் உணவில் ஒரு பகுதி விஷமாக மாறியுள்ளது. சாப்பிட்ட உடனே மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு, அருகில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் கலப்படம் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.