இந்தியா

2000 ரூபாய் நோட்டினால் ஊழலும் இரட்டிப்பாகும்: சீதாராம் யெச்சூரி

புதிதாக வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டினால் ஊழலும் இரட்டிப்பாகும் என்று சீதாராம் யெச்சூரி மாநிலங்களவையில் கூறியுள்ளார்.

DIN


புது தில்லி: புதிதாக வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டினால் ஊழலும் இரட்டிப்பாகும் என்று சீதாராம் யெச்சூரி மாநிலங்களவையில் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்துவிட்டு மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மோடி அறிவித்தது குறித்து மாநிலங்களவையில் விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது பேசிய மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி, "இன்னும் 50 நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று மோடி கூறியுள்ளார். ஆனால், மக்களுக்கு பழைய நோட்டுகளை பெற்றுக் கொண்டு புதிய நோட்டுகளைக் கொடுக்க சரியான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.

பயங்கரவாதம், கருப்புப் பணம், கள்ள ரூபாய் நோட்டு என எதைச் சொன்னாலும், மோடியின் இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது.

500 மற்றும் 1000 ரூபாயை செல்லாது என்று அறிவித்துவிட்டால் ஊழல் ஒழிந்து விடுமா? தற்போது வெளியிடப்பட்டுள்ள ரூ.2000 நோட்டுகளால் ஊழல் இரட்டிப்பாகும்" என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக”... பிகார் முதல்வராகப் பதவியேற்றப் பின் நிதீஷ்குமார்!

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

காட்சிக்குப் பின்னால்... நித்யா மெனன்!

Return-தான்! Reject இல்ல! மெட்ரோ நிராகரிப்பு திட்டமிட்ட சதி! : நயினார் நாகேந்திரன் | BJP | DMK

SCROLL FOR NEXT