முகப்பு
இந்தியா

பாலமுரளி கிருஷ்ணா மறைவு: இசை கலைஞர்கள் இரங்கல்!

உடல்நலக் குறைவால் மரணம் அடைந்த பிரபல கர்நாடக இசை கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா மரணத்திற்கு சக இசை கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

Updated On : 22 நவம்பர் 2016, 5:49 pm IST
பகிர்:

சென்னை: உடல்நலக் குறைவால் மரணம் அடைந்த பிரபல கர்நாடக இசை கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா மரணத்திற்கு சக இசை கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

பின்னணி பாடகி வாணி ஜெயராம்

அவரது மறைவு இசை உலகத்திற்கே பேரிழப்பாகும். அவர் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர். தான் என்ற கர்வம் சிறிதும் இல்லாதவர். இந்த உலகமே பார்த்து பிரமிக்கும் இசைக்கலைஞர் ஆவார். 

Advertisement

Advertisement

பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம்:

அவரது மறைவு இசை கலைஞர்களுக்கு பேரிழப்பாக்கும். தனது 6 வயதிலேயே மேடை ஏறியவர். இசையுலகில் தனது முத்திரையை அழுத்தமாக பதித்தவர்.

இசை கலைஞர் 'வீணை' காயத்ரி:

பாலமுரளி கிருஷ்ணாவின் திடீர் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. கர்நாடக சங்கீதத்தில் பல புதிய மாற்றங்களை கொண்டு வந்தவர் அவர்.

பின்னணி பாடகர் 'புஷ்பவனம்' குப்புசாமி:

அவரது குரல் தனித்துவம் வாய்ந்த ஒரு குரல் ஆகும். இளையராஜாவின் இசையில் 'கவிக்குயில்' படத்தில் அவர் பாடிய 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' பாடல் ஒன்றே அவர் திறமைக்கு சான்று.

பின்னணி பாடகர் சீர்காழி சிவ சிதம்பரம்:

தனது மேன்மையான சங்கீதத்தின் மூலம் ஞானம் வழங்கிய மஹா ஞானி அவர். ஈடு செய்ய முடியாத இழப்பு அவருடையது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments