இந்தியா

ஜம்மு காஷ்மீரில் தேடுதல் வேட்டை: காவல்துறை அதிகாரி உட்பட 6 பேர் கைது!

DIN

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் காவல்துறை அதிகாரி ஒருவர்  உள்பட 6 சந்தேகத்திற்கிடமான நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படைக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாடாமாலோ காவல் நிலைய எல்லைக்கு  உட்பட்ட பகுதியில் தேடுதல்  வேட்டையை பாதுகாப்பு படையினர் துவக்கினர். அப்போது லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 நபர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்தனர்.

அவர்களிடம் கிடைத்த தகவலை அடுத்து தீவிரவாதிகளுக்கு உதவியதாக குப்வாரா மாவட்டம் கார்நாக்கை சேர்ந்த காவல்துறை அதிகாரி  ஒருவரையும் பாதுகாப்பு படையினர் கைது செய்து உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT