இந்தியா

அருணாச்சலில் சம்பவம்: தலையில் குண்டுகள் பாய்ந்து காரில் சடலமாக மீட்கப்பட்ட காவல் அதிகாரி

அருணாச்சலப் பிரதேச காவல்துறையைச் சேர்ந்த துணை ஆய்வாளர், தலையில் குண்டுகள் பாய்ந்து தனது சொந்த காரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PTI


இடாநகர்: அருணாச்சலப் பிரதேச காவல்துறையைச் சேர்ந்த துணை ஆய்வாளர், தலையில் குண்டுகள் பாய்ந்து தனது சொந்த காரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடாநகர் - நஹர்லகான் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரின் ஓட்டுநர் இருக்கையில், தலையில் இரண்டு குண்டுகள் பாய்ந்த நிலையில், துணை ஆய்வாளர் ஹானோ சடங் சடலமாக மீட்கப்பட்டார்.

இன்று காலை 7.30 மணிக்கு இடாநகரில் இருந்து டொய்முக் செல்ல தனது காரில் புறப்பட்ட சட்டங், காலை 8 மணியளவில் பிணமாக மீட்கப்பட்டிருப்பது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

காரிலும் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்ததற்கான தடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அலுவலா்கள், பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி கூட்டம்

பிரதமா் மோடி இன்று இஸ்ரேல் பயணம்!

புற்றுநோய் மரபணு வரைபடம்!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலை மறியல் வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: கிராம மக்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT