இந்தியா

பதான்கோட் எதிரொலி: எல்லையில் நவீன வேலி அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

இந்தியா - பாகிஸ்தான் இடையே 3,323 கி.மீ. தூர எல்லைப் பகுதியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வேலி அமைக்க வேண்டும் என்ற பரிந்துரைக்கு மத்திய அரசு முதற்கட்ட ஒப்புதலை அளித்துள்ளது.

PTI


புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே 3,323 கி.மீ. தூர எல்லைப் பகுதியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வேலி அமைக்க வேண்டும் என்ற பரிந்துரைக்கு மத்திய அரசு முதற்கட்ட ஒப்புதலை அளித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சரவையால் அமைக்கப்பட்ட உள்துறை முன்னாள் செயலாளர் மதுகர் குப்தா தலைமையிலான குழுவினர், பதான்கோட் தாக்குதல் எதிரொலியாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வேலியை அமைக்க வேண்டும் என்ற பரிந்துரையை செய்தது.

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஜம்மு-காஷ்மீர் (1,225 கி.மீ.), ராஜஸ்தான் (1,037), பஞ்சாப் (553 கி.மீ.), குஜராத் (508 கி.மீ.)  ஆகிய 4 மாநிலங்கள் அமைந்துள்ளன.

நவீன தொழில்நுட்பங்கள் - செயற்கைக் கோள் கண்காணிப்பு - கூடிய வேலியை அமைத்து, அவற்றை நான்கு மாநில காவல்துறையின் கண்காணிப்பில் வைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டாச்சு... தண்ணீர் இல்லாமல் தெப்பத் திருவிழா நடைபெறுமா?

SCROLL FOR NEXT