மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!
மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.5.57 உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுதில்லி: மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.5.57 உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு விபரம் வருமாறு
பயனாளர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையானது சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.5.57 காசுகள் உயர்த்தபட்டுள்ளது. அதே நேரம் மானியம் இல்லாமல் வழங்கப்படும் எரிவாயு சிலிண்டரின் விலையானது சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.14.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 14.2 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.440.50 காசுகள் ஆக இருக்கும்.
Advertisement
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பானது நடுத்தர வகுப்பு மக்களை பெரிதும் அவதிக்குள்ளாக்கும் என்று தெரிகிறது.