இந்தியா

மத்திய பட்ஜெட் 2017-18: எதெல்லாம் விலை கூடுது? எதெல்லாம் விலை குறையுது?

IANS

புதுதில்லி: மத்திய நிதியமைச்சர் ஜேட்லி அரசின் 2017-18ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நிதி நிலை அறிக்கையை  நாடாளுமன்றத்தில் இன்று காலை தாக்கல் செய்தார்.

அதில் அவர் மத்திய அரசின் சுங்கம் மற்றும் கலால் வரிகளில் பெரிய அளவில் மாற்றங்களை செய்யவில்லை என்றும், இதனால் அரசுக்குப்

பெரிய வருவாய் இழப்போ அல்லது லாபமோ கிடையாது என்று தெரிவித்திருந்தார். 

இருந்தாலும் அவரது அறிவிப்பின் காரணமாக சில பொருட்களின் விலை உயரவும்,சில பொருட்களின் விலை குறையவும் உள்ளது. அது பற்றிய சிறிய கண்ணோட்டம்:

விலை குறையவுள்ள பொருட்கள்:

எல்.இ.டி விளக்குகள், சோலார் பேனல்கள், அலைபேசிகளுக்கான சர்க்யூட் போர்டுகள், மைக்ரோ ஏ.டி.எம்கள், விரல்ரேகை எடுக்கும் சாதனங்கள், விழித்திரை பதிவு செய்யும் ஸ்கானர்கள்

விலை கூடவுள்ள பொருட்கள்:

வெள்ளி நாணயங்கள், சிகரெட் மற்றும் புகையிலைப்பொருட்கள், பீடிக்கள், பான் மசாலா, வெளிநாடுகளில் இருந்து பார்சல்களில் அனுப்பப்படும் பொருட்கள், வாட்டர் பில்ட்டர்களில் பயன்படுத்தபப்டும் 'மெம்பரேன் எனப்படும் வடி சவ்வு, முந்திரிப்பருப்பு

பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் ஜேட்லி, விரைவில் சரக்கு மற்றும் சேவை வரி திட்டமானது அமல் படுத்தபட உள்ளதால் தற்போது நடைமுறையில் உள்ள கலால் மற்றும் சேவை வரிகளில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT