இந்தியா

'ம.பி.யில் கைதான உளவாளிகள் பாஜகவினர் அல்ல'

DIN

மத்திய பிரதேசத்தில் பாகிஸ்தான் உளவாளிகள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பாஜகவினர் அல்ல என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் கடந்த 9-ஆம் தேதி பாகிஸ்தான் உளவாளிகளாக சந்தேகிக்கப்படும் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களுடன் பாஜ தலைவர்கள் இணைந்திருக்கும் புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: மத்திய பிரதேசத்தில் பாகிஸ்தான் உளவாளிகள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கும், பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதுதொடர்பாக, கட்சியின் மாநிலப் பிரிவு ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளது என்றார் ஜிதேந்திர சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT