இந்தியா

ஊடுருவல் சதி முறியடிப்பு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே வியாழக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக, ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் செக்டார் பகுதியில், எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு அருகே பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருந்ததை பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை கண்டறிந்தனர். அவர்களை பாதுகாப்புப் படையினர் நெருங்கிச் சென்றபோது, இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்த மோதலில், பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனால், பயங்கரவாதிகளின் ஊடுருவல் சதி முறியடிக்கப்பட்டது. மேலும், அந்தப் பகுதியில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார் அவர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT