இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் இன்று ஆதரவு திரட்டுகிறார் ராம்நாத் கோவிந்த்

DIN

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் ஜம்மு- காஷ்மீரில் புதன்கிழமை (ஜூன் 28) ஆதரவு திரட்டுகிறார்.
இதுதொடர்பாக, மத்திய செய்தி - ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த், ஜம்மு- காஷ்மீரைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக புதன்கிழமை ஸ்ரீநகருக்குச் செல்கிறார். அவருடன் நானும் செல்கிறேன்.
ஜூலை மாதம் 4-ஆம் தேதி ராம்நாத் கோவிந்த், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
அப்போது, இந்த மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் அவர் ஆதரவு திரட்டுகிறார். இப்பயணத்தின்போது, ராம்நாத் கோவிந்துக்காக நானும் ஆதரவு திரட்டவுள்ளேன் என்றார் வெங்கய்ய நாயுடு.
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை மாதம் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ராம்நாத் கோவிந்த் ஒவ்வொரு மாநிலமாக பயணம் மேற்கொண்டு தமக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முகூா்த்தக் கால் நடவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 49.21 அடி

கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

ஷெட் அமைக்கும் பணியின்போது பட்டாசு ஆலையில் தீப்பிடித்து இளைஞா் பலி

சுங்கச்சாவடி ஊழியா்களுடன் வழக்குரைஞா் மோதல் 5 போ் காயம்

SCROLL FOR NEXT