இந்தியா

நிகழாண்டில் 100 சதவீத மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

DIN

நிகழாண்டில் 100 சதவீத பருவமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தில்லியில் இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெனரல் கே.ஜே. ரமேஷ் கூறியதாவது:

எல்-நினோ நிலையின் தாக்கம் தற்போது குறைந்திருப்பதை வைத்து கணக்கிடும்போது, நிகழாண்டில் பருவமழை அளவு சராசரியாக இருக்கும் என்று தெரிகிறது.

இதனால் பருவமழை காலத்தில் 100 சதவீத அளவுக்கு மழை பெய்யக்கூடும். ஆஸ்திரேலிய வானிலை ஆராய்ச்சி மையமும், எல்-நினோவின் தாக்கம் நிகழாண்டில் குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால், பருவமழை நன்றாக பெய்யும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார் ரமேஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT