இந்தியா

முப்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும் நிர்மலா சீதாராமன்!

DIN

அந்தமான் நிகோபார் தீவுகளில் முப்படை வீரர்களுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தீபாவளி கொண்டாடவுள்ளார்.
இந்தியாவில் ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளும் நிலைக்கொண்டுள்ள ஒரே இடம் அந்தமான் நிகோபார் தீவுகளாகும். இங்குள்ள முப்படை வீரர்களுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட இருக்கிறார். இதற்காக, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தில்லியிலிருந்து புதன்கிழமை (அக்.18) காலை புறப்படும் அவர், அந்தமான் நிகோபாருக்கு பிற்பகல் சென்றடைகிறார். அப்போது, அங்குள்ள முப்படைகளின் தயார் நிலை குறித்து அவர் ஆய்வு செய்கிறார். இதையடுத்து, முப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் நிர்மலா சீதாராமன் தீபாவளியை கொண்டாடுகிறார். அதனைத் தொடர்ந்து, கார் நிகோபாரில் அமைந்துள்ள விமானப் படை நிலையத்தை அவர் புதன்கிழமை பார்வையிடுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT