இந்தியா

ராணுவ காவல்துறையில் 874 பெண்கள்

இந்திய ராணுவ காவல்துறையில் பெண்களை சேர்ப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

DIN

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சாரக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார். பாதுகாப்புத்துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கப்பேவதாக பதவியேற்றபோது அவர் தெரிவித்தார். 

இந்நிலையில், ராணுவ காவல்துறையில் பெண்களை நிர்ணயம் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து, வருகிற 2018 முதல் இம்முடிவு அமல்படுத்தப்படுகிறது. ஆண்டுக்கு 52 பேர் என்ற விகிதத்தில் 874 பெண்களை முதல்கட்டமாக சேர்ப்பதற்கான முடிவு வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து ராணுவ தளபதி கூறியதாவது:

ஒவ்வொரு வருடமும் ராணுவ காவல்துறையில் பெண்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 874 பெண்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது பாலின தடைகளை உடைப்பதில் ஒரு பெரிய படியாக கருதப்படும் திட்டமாக அமையும் என்றார்.

மருத்துவம், சட்டம், கல்வி, உள்ளிட்ட இந்திய ராணுவத்தின் துறைகளில் பெண்கள் பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலை: பொதுமக்கள் அவதி

மாற்றி யோசிப்போம்!

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்: டிரம்ப்பின் திட்டம் வெற்றி பெறுமா? என்பது குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

சொற்பொழிவுகளில் சொல்லப்படாதவர்கள்!

டேங்கர் லாரிகள் போராட்டத்துக்கு தடை கோரிய வழக்கு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT