இந்தியா

மும்பையில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு!

DIN


சென்னை: மும்பையில் இன்று மதியம் முதல் நாளை மதியம்  வரை பல பகுதிகளில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, இன்று மதியம் முதல் நாளை வரை மும்பையில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மும்பையில் கடைசியாக பெய்த கன மழையை விடவும் தற்போது மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது.

மும்பையின் புறநகர்ப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு அதிகபட்சமாக 500 மி.மீ. மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.

மும்பைவாசிகள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகம், கல்லூரி சென்றவர்கள் வீட்டுக்கு விரைவாக சென்று விடலாம். நாளை இரவு முதல் மழை படிப்படியாகக் குறைந்துவிடும். எனவே, நாளை மற்றும் நாளை மறுநாள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பது நல்லது என்றும் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT