முகப்பு
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் 3வது நாளாக ரயில் சேவை ரத்து: தேர்வுகள் ஒத்திவைப்பு

பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிவினைவாத கட்சிகள் இன்று போராட்டம் அறிவித்திருந்தன.

Updated On : 4 ஏப்ரல், 2018 at 2:54 PM
பகிர்:


ஸ்ரீநகர்: பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிவினைவாத கட்சிகள் இன்று போராட்டம் அறிவித்திருந்தன.

பிரிவினைவாதிகள் அறிவித்திருந்த போராட்டத்தை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீரில் இன்று தொடர்ந்து 3வது நாளாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளதால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீநகர் - சோனாமார்க் சாலை போக்குவரத்துக்காக முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.